Thursday

Vishnu In Sanga Tamil Literature


Vishnu In Sanga Tamil Literature:

ஆயிரம் விரித்த அணங்குடைஅருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,மாயுடை மலர் மார்பின்மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,வாய் வாங்கும் வளைநாஞ்சில்ஒரு குழை ஒருவனை; 5
(இது தரவு )
எரிமலர் சினைஇய கண்ணைபூவை
விரிமலர் புரையும் மேனியைமேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினைமார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினைமால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
இது கொச்சகம் )
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப்25

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.
(இவை நான்கும் அராகம்)
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30இருவர் தாதைஇலங்கு பூண் மாஅல்!தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
(இது ஆசிரியம்)

அன்ன மரபின் அனையோய்நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
(இது பேரெண்)

அருமை நற்கு அறியினும்ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅதுஅல்லி அம்
திரு மறு மார்பநீ அருளல் வேண்டும்.
(இது ஆசிரியம்)

விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40அறனும்ஆர்வலர்க்கு அளியும்நீ;திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும்மாற்றலர்க்கு அணங்கும்நீ;அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும்தெறு கதிர்க் கனலியும்நீ; 45

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும்மடங்கலும்நீ;நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும்வனும்நாற்றமும்நீ;வலன் உயர் எழிலியும்மாக விசும்பும், 50

நிலனும்நீடிய இமயமும்நீ.

(இவை ஆறும் பேரெண்)

அதனால்,

இது தனிச் சொல் )

இன்னோர் அனையைஇனையையால்‘ என,அன்னோர் யாம் இவண் காணாமையின்,பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,நின்னோர் அனையைநின் புகழோடும் பொலிந்தே!
(இது சுரிதகம்)

நின் ஒக்கும் புகழ் நிழலவை;பொன் ஒக்கும் உடையவை;புள்ளின் கொடியவைபுரி வளையினவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;மண்ணுறு மணி பாய் உருவினவை;எண் இறந்த புகழவைஎழில் மார்பினவை,
இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)

ஆங்கு,
இது தனிச் சொல் )

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிகஎன,ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-வாய்மொழிப் புலவநின் தாள்-நிழல் தொழுதே; 68
(இது சுரிதகம்)



*******************************


Meaning


எவ்வுயிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இயல்பை உடைய ,சினத் தீயை உமிழுகின்ற படம் விரிந்த ஆயிரம் தலைகளைஉடைய ஆதிசேஷன் உன் தலை மீது நிழலாக இருக்கிறான் .திருமகள் வீற்றிருக்கும் மலர் மார்பினை உடையவன் நீ.


குற்றமில்லா வெண்மையான சங்கினைப் போன்றநிறத்தையும்மிக உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில்கட்டப்பட்ட யானைக் கொடியினை உடையவனும்,கூர்மையாகவும் , வளைந்தும் இருக்கும் கலப்பையினைஉடையவனும்ஒற்றைக் குழையை அணிநதவனுமாகியபலதேவனாகவும் நீ விளங்குகின்றாய்.
கருடச் சேவல் கொடியைக் கொண்டவனே! தாமரைபோன்ற அழகிய கண்களை உடையவன் நீ .


காயாம் பூவினதுநிறத்தைஉடையதுஉன் மேனி.
அத்திருமேனியின் கண்,திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம் கௌஸ்துப மாலையை உடையவன் நீ.


கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல,பொன்னிற ஆடையை உடுத்தி உளாய்.


நாவன்மை உடைய அந்தணர் உணர்தற்குரிய அரு மறைப்பொருளே !
நினது அருளாலே உனது வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள்உன்னுடைய அருள் தழுவுதலாலே நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற வல்லவர்கள் ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).
தம் அறியாமையினாலே உன்னோடு போர் செய்வோம்என்று வந்த அவுணர்களுடைய வலிமை கெடும் வண்ணம்,போரின் கண் வென்ற குற்றமற்ற தலைமை உடையஅண்ணலே !




காமன்சாமன் என்னும் இருவருடைய தந்தையே !


விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவனே !


உன் வரவினை, (அவதாரத்தை அல்லது வரலாற்றை )விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்பதுமயக்கம் தீர்ந்ததேர்ச்சி பெற்ற முனிவருக்கும் அரிதானது!அப்படிப்பட்ட இயல்பினை உடையவனே !



முனிவர்களுக்கே அப்படி என்றால்நீ எப்படிபட்டவன் என்றுஉரைப்பது எங்களுக்கு மட்டும் எப்படி எளிதாகும் ?
அழகிய தாமரை மலரின் கண் வீற்றிருக்கும் திருமகளைமார்பினிலே தாங்கியுள்ளவனேஅறிவதற்கு இயலாததுஉன் வரலாறு என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் ,உன் மேல் எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும்பெருமையுடையது என்பதால்நாங்கள் கூறுவதை சிறுமைஉடையது என்று நீ கருதி எங்களை வெறுத்து விடாமல்அருள வேண்டும்.




வெற்றி மிகுந்த பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்நின்அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;
நன்னெறியில் செல்லும் திறனில்லாதவரைஅந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும் நீயே;அவ்வாறு திருத்துவதால்உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;


அழகும்,எழுச்சியும் உடைய வானத்தின் கண் அணிபெற விளங்கும்ஒளிதரும் நிலவும் நீ;

சுடுகின்ற சுடரை உடைய சூரியனும் நீயே.

ஐந்து தலைகளைத் தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்கடத்தற்கரிய திறமையையும்வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவபெருமானும் நீயே;

அவனால் செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே;

நன்மை தருகின்றகுற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;

பூவின் மேல் இருக்கும் பிரம்மனும் நீ;

அவன் செய்யும் நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே;


வானின் கண் உயரும் மேகமும் நீ;
மாகம் என்னும் வானமும் நீ;
இந்தப் பூமியும் நீ;
நீண்டு நெடிதுயர்ந்த இமயமும் நீயே.



நீ இவரைப் போன்றவன்இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு காணப்படாமையால்பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும் ஆள்வதற்குஅடையாளமாக நின் வலப் பக்கத்தே ஏந்திநிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால்உனக்கு ஒப்புமை நீயேதான்!
உன் புகழ்தான் உனக்கு ஒப்புமையானது.



புள் என்னும் கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.
முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
இகழ்வாராகிய பகைவரை வென்றுகொன்று என்று தக்கவாறு செயல் புரியும் மாறுபாட்டினை உடைய சக்கரப்படையை உடையவன் நீ.
கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை உடைய திருமேனியை உடையவன் நீ.
அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.



என இவ்வாறு கூறிநாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு ஒன்று கூடிஉன் திருவடியில் இணைந்துஎன்றும் இந்தத் திருவடி விளங்குவதாக,பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.

வாய்மொழிப் புலவனே!

வாய்மொழியாகச் சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!
உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் .

No comments:

Post a Comment